search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழிவு நீர்"

    • பாரிவாக்கம் இணைப்பு சாலை வழியாக செல்லக்கூடிய கால்வாயில் தண்ணீர் செல்லாத வகையில் மண்ணை கொட்டி மூடப்பட்டுள்ளது.
    • துர்நாற்றம் வீசுவதால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பாரிவாக்கம் இணைப்பு சாலையில் பூந்தமல்லி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. மேலும் புதிதாக அமைக்கப்படும் சாலையின் ஓரத்தில் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணியும் நடக்கிறது. இதற்கிடையே பாரிவாக்கம் இணைப்பு சாலை வழியாக செல்லக்கூடிய கால்வாயில் தண்ணீர் செல்லாத வகையில் மண்ணை கொட்டி மூடப்பட்டுள்ளது.

    இதனால் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தற்போது கழிவுநீர் அனைத்தும் சாலையில் தேங்கி ஆறாய் ஓடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். துர்நாற்றம் வீசுவதால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மழை நீர் கால்வாய் அமைக்கும் பணி நடக்கும் போது முறையாக கழிவுநீர் வெளியே செல்ல வழிவகை செய்யவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.
    • கடந்த 2 ஆண்டுகளாக கோவிலில் பக்தகர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் உள்ளது. இதில் 2-வது வார்டு பவர் ஹவுசில் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் திரண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆடி மாதத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் நடக்கும்.

    கடந்த 2021-ம் ஆண்டு நெடுஞ்சாலை துறையினர் சிராஜ் நகரில் இருந்து கோவில் வழியாக சீரங்கன்ராயன் ஓடை வரை சாலையோரத்தில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது.

    இதில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் வரை வந்து பாதியில் இந்த பணி நிறுத்தப்பட்டது. இதனால் கால்வாய் வழியாக வரும் கழிவுநீர் அனைத்தும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் முழுவதும் தேங்கி நிற்கிறது.

    இதனால் கடந்த 2 ஆண்டுகளாக கோவிலில் பக்தகர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுதொடர்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுத்தி உள்ளனர். இதுகுறித்து வார்டு உறுப்பினர் சரிதா கூறும்போது, கடந்த 2 ஆண்டுகளாக கழிவுநீர் கால்வாய் கட்டி பாதியில் நிறுத்தியதால் அங்காளம்மனை தரிசனம் செய்ய முடியாத நிலையில் உள்ளது.

    இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அம்மன் கோவில் வாசலில் கூட நிற்க முடியாத நிலை உள்ளது என்றார்.

    • நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது
    • பல முறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை என குற்றசாட்டு

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ராட்டினமங்கலம் ஊராட்சிக்குபட்ட இ.பி.நகர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன.

    இந்த அரிசி ஆலையிலிருந்து வெளியேறும் கழிவு நீர் குடியிருப்பு பகுதியில் உள்ள கால்வாயில் சென்று அடைப்புகள் ஏற்பட்டு பின்னர் குடியிருப்பு பகுதியில் தேங்கி தேங்கி வருகிறது.

    குடியிருப்பு பகுதி காலிமனைகளில் அரிசி ஆலை கழிவு நீர் தேங்கியதால் கொசு உற்பத்தி பண்ணை போல் காட்சியளிக்கின்றன.

    மேலும் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் குளம் போல் தேங்கியுள்ளதால் குழந்தைகள் முதியவர்கள் காய்ச்சல் ஏற்படுவதும் நோய் தொற்றும் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளன.

    இது சம்மந்தமாக அரிசி ஆலை உரிமையா ளர்களிடம் ஊராட்சி நிர்வாகி மாவட்ட நிர்வாகம் ஆகியோரிடம் பல முறை முறையிட்டும் அதிகாரிகள் செவி சாய்ப்ப தில்லை எனவும் குடியிருப்பு வாசிகள் குற்றசாட்டுகின்றனர்.

    மேலும் அரிசி ஆலை கழிவு நீர் தொடர்ந்து தேங்கி வருவதால் குடியிருப்பு பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளன கழிவு நீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.

    • மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீரால் கடும் துர்நாற்றம் பொதுமக்கள், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
    • சுகாதார சீர்கேடுகள் நிலவுவது வேதனைக்குரிய விசயமாகும்.

    மதுரை

    மதுரை மாநகராட்சியில் வளர்ச்சி திட்டங்களுக்காக பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றதாக கூறப்பட்டாலும், தற்போது பல பகுதிகளில் அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.கடந்த 2 வாரங்களாக பெய்த கோடை மழையால் சாலைகள் மோசமாக காட்சியளிக்கிறது.

    நகரில் பாதாள சாக்கடை பராமரிப்பு பணிகளை சரியாக மேற்கொள்ளாததால் கழிவுநீர் வெளியேறுவது தொடர் கதையாக உள்ளது. பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள சித்திரை, மாசி விதிகளில் இந்த பிரச்சினை நீண்ட காலமாக உள்ளது.

    சமீபத்தில் நடந்த சித்திரை திருவிழாவின் போதுகூட கிழக்கு சித்திரை வீதியில் பாதாள சாக்கடை நிரம்பி கழிவு நீர் வெளியேறியது. தற்போது மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள சாலைகள், தெருக்களில் அடிக்கடி பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் ஆறு போல் ஓடுகிறது. சாலைகளில் வடிகால் வசதி இல்லாததால் கழிவு நீர் ஆங்காங்கே தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

    மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல வெளியூர் பக்தர்கள் நேதாஜி சாலை வழியாக வரவேண்டும். ஆனால் நேதாஜி சாலையில் உள்ள தண்டபாணி முருகன் கோவிலில் இருந்து சில மீட்டர் தூரத்தில் உள்ள பாதாள சாக்கடை அடிக்கடி நிரம்பி வெளியேறுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கோவி லுக்கு வரும் வெளி மாநிலத்த வர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர்.

    மேலும் மாதத்தில் ஒரு முறை பாதாள சாக்கடையை எந்திரம் மூலம் சுத்தம் செய்யும் ஊழியர்கள் அந்த கழிவுகளை உடனே அப்புறப்படுத்தாமல் ஒரு நாள் முழுவதும் நடு ரோட்டில் கொட்டி வைத்து விட்டு செல்கின்றனர். இதனால் அந்தப் பகுதியில் சொல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது.

    இது தொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க அக்கறையும் காட்டவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இன்று காலையில் வடக்கு மாசி வீதி சாலையில் உள்ள பாதாள சாக்கடை நிரம்பி கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதுபோன்று நாள்தோறும் கோவிலை சுற்றியுள்ள ஏதேனும் ஒரு பகுதியில் இந்த பிரச்சினை ஏற்படுகிறது.

    இதேபோல் ரெயில் நிலையத்தில் இருந்து வரும் வெளி மாவட்டத்தினர் மற்றும் மற்ற மாநில மக்கள் டவுன்ஹால் ரோடு வழியாக கோவிலுக்கு செல்கின்றனர். டவுன்ஹால் ரோடு பகுதியில் குப்பைகளும், கழிவுகளும் தேங்கி சுகாதார மற்ற முறையில் காட்சி யளிக்கிறது. இதனால் வெளியூர்களில் இருந்து நகருக்கு வரும் மக்களுக்கு மதுரையின் சுகாதாரம் குறித்து தவறான எண்ணம் ஏற்படும்.

    எனவே மதுரை மாநகராட்சி நிர்வாகம் கோவிலை சுற்றி சுகாதாரமாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    உலக அளவில் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி இது போன்ற சுகாதார சீர்கேடுகள் நிலவுவது வேதனைக்குரிய விசயமாகும்.

    • பஸ் நிறுத்தத்தை சிறிது தொலைவில் அமைப்பது தொடர்பாக ஆலோசித்துள்ளோம்
    • இறைச்சி கடைக்காரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகர பகுதியில் சுகாதார சீர்கேடு, கழிவுநீர் பிரச்சனை, குடிநீர் பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சனைகளை விரைந்து தீர்க்க மேயர் மகேஷ் தினமும் ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறார்.

    பால்பண்ணை சந்திப்பு பகுதியில் இருந்து இன்று தனது ஆய்வை மேயர் மகேஷ் தொடங்கினார். அப்போது அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் போக்குவரத்துக்கு இடை யூறாக இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த பஸ் நிறுத்தத்தை சிறிது தொலை வில் மாற்றுவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண் டார். பின்னர் டெரிக் சந்திப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது அந்த பகுதியில் உள்ள இறைச்சிக் கடை ஒன்று அரசின் விதிமுறைக்குட்பட்டு செயல்படாதது தெரிய வந்தது. ஏற்கனவே அந்த இறைச்சி கடைக்கு நோட் டீஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.

    டெரிக் சந்திப்பு பகுதியில் மழை நேரங்களில் தண்ணீர் சாலைகளில் தேங்குவதாக வந்த புகாரை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கழிவுநீர் ஓடைகளை சீரமைத்து சாலைகளில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரி யிடம் கூறினார்.

    பின்னர் ஜேக்கப் தெரு பகுதியில் ஆய்வு மேற் கொண்டபோது காலி இடத்தில் குப்பைகள் மழை போல் குவிந்து கிடந்தது. அந்த இடத்தில் கிடந்த குப்பைகளை உடனடியாக மாற்றுவது தொடர்பாக அதிகாரியிடம் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் மேயர் மகேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பால்பண்ணை பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் போக்கு வரத்துக்கு இடையூறாக இருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.பஸ் நிறுத்தத்தை சிறிது தொலை வில் அமைப்பது தொடர் பாக ஆலோசித் துள்ளோம். இது தொடர்பாக ஆலோ சித்து நடவடிக்கை எடுக்கப் படும்.

    ஏற்கனவே நாகர்கோவில் மாநகர பகுதியில் இறைச்சி களை வெட்டுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளது. தற்பொழுது இறைச்சி கடையில் உள்ள கழிவுகள் சாக்கடையில் கலப்பதாக புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. இதனால் துர்நாற் றம் வீசுவதாகவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இறைச்சிகளை வெட்டும் ேபாது அரசின் விதிமுறைகள் உட்பட்டு வெட்ட வேண்டும். இல்லாத இறைச்சி கடைக்காரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஜேக்கப் தெரு பகுதியில் காலி இடத்தில் குப்பைகள் அதிகளவு கொட்டப்பட்டு இருந்தது. அந்த இடம் யாருக்கு சொந்தமான இடம் என்று தெரியவில்லை. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமா னோர் அந்த பகுதியில் குப்பைகளை தொடர்ந்து கொட்டி விடுவதால் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. உடனடியாக அந்த குப்பை களை அகற்ற அதிகாரி களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

    மேலும் சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளரிடம் பேசி குப்பைகளை அங்கே கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாகர்கோவில் நகரில் மழை நேரங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்காத வகையில் சாக்கடைகள் சுத்தம் செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது ஆணை யாளர் ஆனந்த மோகன், நகர்நல அதிகாரி ராம் மோகன், என்ஜினீயர் பால சுப்ரமணியன், மண்டல தலைவர் ஜவகர், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • அனுமதி பெறாமல் கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும்.
    • பொன்னேரி நகராட்சி ஆணையாளர் கோபிநாத் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    பொன்னேரி நகராட்சி உள்ள 27 வார்டுகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். குடியிருப்புகளில் உள்ள கழிவுநீர், தொழிற்சாலைகளின் கழிவு நீர் டிராக்டர், லாரிகள் மூலம் அகற்றப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் பெரும்பாலான வாகனங்கள் உரிய அனுமதி பெறாமல் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் கழிவு நீர் அகற்றும் பணியில் ஈடுபடுவதாக தெரிகிறது.

    இதைத்தொடர்ந்து உரிய அனுமதி பெறாமல் கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும் என்று பொன்னேரி நகராட்சி ஆணையாளர் கோபிநாத் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    • கழிவுநீர் சுமார் 300 மீட்டர் தூரத்தில் உள்ள நீரோடையில் விடப்படுவதாக புகார்எழுந்துள்ளது.
    • பொங்கலூர் வட்டார வளர்ச்சி அதிகாரி மீனாட்சியிடம் மனு கொடுத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம்அருகே மாதப்பூரில் கோவை- திருச்சி தேசிய நெடு ஞ்சாலை, சிங்கனூர் பிரிவு அருகே தனியார் ஓட்டல் ஒன்றுசெயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சுமார் 300 மீட்டர் தூரத்தில் உள்ள நீரோ டையில் விடப்படுவதாக புகார்எழுந்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் அருகில் உள்ள பாதிக்கப்பட்ட விவசாயிகள் கழிவு நீரை ஓடையில் விடும் ஓட்டல் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொங்கலூர் வட்டார வளர்ச்சி அதிகாரி மீனாட்சியிடம்மனு கொடுத்தனர்.அந்த மனுவில்அவர்கள் கூறியிருப்பதாவது:- ஓட்டலில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு குழாய்அமைத்து நீரோடையில் கழிவுநீர் திறந்து விடப்படுகிறது. இந்தகழிவுநீரானது நீரோடையில் கட்டப்ப ட்டுள்ள தடுப்பணைகளில் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுவதுடன், நிலத்தடி நீர்ம ட்டமும் பாதிக்கப்படுகிறது. அருகில் உள்ள விவசாய நிலங்களில்உள்ள ஆழ்துளை கிணறுகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால்ஆழ்துளை குழாயில் இருந்து வரும் குடிநீரை மக்கள் குடிக்க முடியவில்லை. துர்நாற்றத்தை கட்டுப்படுத்த ஓட்டல் நிர்வாகம் ஒருவித ரசாயனத்தை பயன்படு த்துவதாக தெரிகிறது. இந்த ரசாயனம் கலந்த நீர் அருகில் உள்ள கிணறுகளில் கலந்து அந்த நீரை குடிக்கும் மாடுகள் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு வளர்த்து வந்த மீன்களும் இறந்து விட்டது. ஓட்டல் நிர்வாகம் ஏற்கனவே அந்த பகுதியில் உள்ளஆழ்துளை கிணறுகளிலும் கழிவுநீரை கலந்து விடுவதாக தெரி கிறது. சுத்தகரிக்கப்படாத இந்த கழிவுநீரை அப்படியே நீரோடையில் விடுவதால் பெரும்சுற்றுச்சூழல் மாசுபாடுஏற்பட்டு வருகிறது.

    நீரோடைகளில் கழிவு நீரை கலக்கக்கூடாது என நீதிமன்ற உத்தரவு இருந்தும்அதனை மதிக்காமல் செயல்படும் ஓட்டல் நிர்வாகத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதனால் பாதிக்கப்ப ட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையும் பெற்று தர வேண்டும். இந்த சட்டவிரோத செயலை உடனடியாக தடுக்க ஒன்றிய நிர்வாகமும்,அரசு அதிகாரிகளும் முன்வர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில்தெரிவித்து ள்ளனர்.

    • ஒரு வாரமாக சாலையில் சாக்கடை கழிவு நீர் சாலையில் வழிந்தோடுகிறது.
    • இலக்கியபட்டி பஞ்சாயத்தில் பல முறை புகார்கள் அளித்தும் சரி செய்ய முன்வரவில்லை.

    தருமபுரி,

    தருமபுரியை அடுத்த இலக்கியம்பட்டி பஞ்சாயத்து க்குட்பட்ட பிடமனேரி சொசைட்டி காலனி மற்றும் சுற்றுவட்டார குடியிருப்பு பகுதிகளில் இருந்து தெருவில் கழிவு நீர் வெளியேறும் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு வாரமாக சாலையில் சாக்கடை கழிவு நீர் சாலையில் வழிந்தோடுகிறது.

    இலக்கியபட்டி பஞ்சாயத்தில் பல முறை புகார்கள் அளித்தும் சரி செய்ய முன்வரவில்லை. இதன் காரணமாக சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளதோடு துர் நாற்றம் வீசிவருகிறது.

    ஏற்கனவே பருவநிலை மாற்றத்தால் வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் இலக்கியம்பட்டி பஞ்சாயத்து நிர்வாகம் உடனடியாக சரி செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    • பொக்லைன் மூலம் குழி வெட்டி கழிவு நீரை வெளியேற்றியுள்ளனர்.
    • செவிலியர் கீதா அடங்கிய மருத்துவகுழுவினர் சிந்தகம்பள்ளி அங்கன்வாடி மையத்தில், சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தினர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அடுத்த நாரலப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட சிந்தகம்பள்ளி கிராமத்தில், 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆனால் இங்கு முறையான சாக்கடை கால்வாய் வசதி இல்லை.

    ஊராட்சி மூலம் ஏற்கனவே அமைக்கப்பட்ட குறுகிய சாக்கடை கால்வாய் வழியாக கழிவுநீர் வெளியேற வழியின்றி சாலைகளில் தேங்கியதால், அப்பகுதியில், பொக்லைன் மூலம் குழி வெட்டி கழிவு நீரை வெளியேற்றியுள்ளனர்.ஆனால் கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி அப்பகுதியிலுள்ள நெல் வயல்களில் பாய்ந்து, பயிர்கள் நாசமாகின. இதையடுத்து, சாக்கடை கால்வாயை அடைத்துள்ளனர். இதனால், கடந்த, ஆறுமாதங்களாக வெட்டப்பட்ட குழியில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் பலர் காய்ச்சலால் அவதிப்பட்டு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று வட்டார மருத்துவ அலுவலர் சுசித்ரா தலைமையில், டாக்டர் கோவிந்தராஜ், சுகாதார ஆய்வாளர் பாஸ்கர், செவிலியர் கீதா அடங்கிய மருத்துவகுழுவினர் சிந்தகம்பள்ளி அங்கன்வாடி மையத்தில், சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தினர்.

    இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுபுழுக்கள் அதிகரித்து, சுகாதார சீர்கேட்டால் தவித்து வருகிறோம். கழிவு நீர் செல்ல வெட்டப்பட்ட குழியால் வீடுகளுக்கு செல்ல கூட பாதையில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு சாக்கடை கால்வாய் அமைத்து கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • சாக்கடை நீர் கழிவுநீர் செல்வதால் பொதுமக்கள் கடும் அவதி அடைகிறார்கள்..
    • மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். .

    விழுப்புரம்::

    மரக்காணம் அருகே நகர் கிராமத்தில் சாக்கடை நீர் கழிவுநீர் செல்வதால் பொதுமக்கள் கடும் அவதி அடைகிறார்கள். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே நகர் கிராமத்தில் 5000 குடும்பங்கள் வசிக்கின்றனர். இதில் பெரும் பாலானோர் விவசாயிகள்   இங்கு ஊரின் நடுவில் பெருமாள் கோயில் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களின் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பெருமாள் கோவில் எதிரில் சாலையில் தேங்கி நிற்கிறது  சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசு உற்பத்தியாகி மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சல் ஏற்பட்டு அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, இந்த சாலையில் கழிவுநீர் வாய்க்கால் கட்ட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல்வேறு முறை மனு மற்றும் புகார் கொடுத்தனர். இருப்பினும் கழிவுநீர் வாய்க்கால் கட்டப்பட வில்லை.  எனவே, புதியதாக பொறுப்பேற்றுள்ள விழுப்புரம் மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு நகர் கிராமத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகாரிகளுக்கு மேயர் மகேஷ் உத்தரவு
    • வணிக நிறுவனங்கள் கண்டிப்பாக அவர்களது இடத்திலேயே கழிவு நீரை உறிஞ்சு குழி அமைத்து அதில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில், கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள வணிக நிறுவனங்களில் இருந்து மழை நீர் வடிகாலில் கழிவு நீரை திறந்து விடுவதாகவும், இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் மேயருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

    இதையடுத்து மேயர் மகேஷ் இன்று காலை டெரிக் சந்திப்பு முதல் கலெக்டர் அலுவலகம் வரை உள்ள மழைநீர் வடிகாலை பார்வையிட்டார். அப்போது மழைநீர் வடிகாலில், கழிவுநீர் தேங்கி நிற்பதை கண்டார்.

    இதனால் சுகாதார பாதிப்பு ஏற்படும் என்பதால் வணிக நிறுவன உரிமையாளர்களிடம் மழை நீர் வடிகாலில் இனி கழிவுநீர் விடக்கூடாது என கேட்டுக்கொண்டார்.

    மேலும் மாநகராட்சி அதிகாரிகளிடம் மழைநீர் வடிகாலில், கழிவுநீர் திறந்து விடும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தண்ணீர் தேங்காத வகையில் அடைப்புகளை சரி செய்யவும் உத்தரவிட்டார். பின்னர் மேயர் மகேஷ் கூறியதாவது:-

    கலெக்டர் அலுவலகம் முன்பு ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. கடந்த 25 ஆண்டுகளாக இந்த பகுதியில் மழை நீர் வடிகாலில், கழிவு நீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசி வந்தது. கடந்த 9 மாதத்திற்கு முன்பு இந்த மழை நீர் வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தண்ணீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    ஆனால் சில வணிக நிறுவனங்கள் மீண்டும் கழிவு நீரை, மழை நீர் வடிகாலில் திறந்து விட்டுள்ளனர், இனி வணிக நிறுவனங்கள் கண்டிப்பாக அவர்களது இடத்திலேயே கழிவு நீரை உறிஞ்சு குழி அமைத்து அதில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வணிக நிறுவனங்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    மாநகர் நல அதிகாரி டாக்டர் ராம்குமார், சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

    • யாரும் எதிர்பாராத வகையில் அவர் நின்ற தரைபகுதி திடீரென உடைந்து விழுந்தது. இதனால் நிலை தடுமாறிய சுஜிஜா உடைந்து விழுந்த பள்ளத்திற்குள் விழுந்தார்
    • அப்போது இடிந்து விழுந்த பகுதியில் மண்டப த்தில் உள்ள கழிவு நீர் தேக்கி வைப்பதற்காக ஒரு கழிவு நீர் தொட்டி (செப்டிக் டேங்க்) அமைப்பக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் திரு வட்டார் அருகே உள்ள மாத்தூர் ஒட்டலிவிளை பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சமுதாய நலக்கூடம் உள்ளது.

    இந்த சமுதாய நலக் கூடத்தில் நேற்று திருமண நிகழ்ச்சி மாலையில் நடை பெற்றது. இதில் ஏராள மானோர் பங்கேற்றனர். மாலையில் திருமண விருந்து நடைபெற்றது. விருந்து சாப்பிட்டவர்கள் கை கழுவுவதற்காக அதற்கான பகுதிக்குச் சென்றனர்.

    முதலாறு பகுதியை சேர்ந்த மோகன்தாஸ், தனது மனைவி சுஜிஜா (வயது48) மற்றும் 2 மகன்களுடன் விழாவிற்கு வந்து இருந்தார். அவர்களும் விருந்து சாப்பி ட்டு விட்டு கை கழுவ வந்தனர். குடும்பத்தினர் அனைவரும் கை கழுவி சென்று விட்ட நிலையில் சுஜிஜா மட்டும் அங்கு நின்றார்.

    அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அவர் நின்ற தரைபகுதி திடீரென உடைந்து விழுந்தது. இதனால் நிலை தடுமாறிய சுஜிஜா உடைந்து விழுந்த பள்ளத்திற்குள் விழுந்தார். அவர் மீது சிமெண்ட் சிலாப்புகளும் விழுந்தன.

    அங்கு என்ன நடந்தது என்பது சிறிது நேரம் யாருக்கும் தெரியவில்லை. பின்னர் சுதாரித்துக் கொண்ட சிலர், சுஜிஜாவை காப்பாற்ற முயன்றனர். அப்போது மேலும் 2 பேர் பள்ளத்தில் விழுந்தார்கள். இது பற்றி குலசேகரம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

    வேர்கிளம்பி பேரூ ராட்சி தலைவர் சுஜிர் ஜெபசிங்குமாரும் அந்த பகுதிக்கு சென்று மீட்பு நடவடிக்கையை துரிதப்படு த்தினார். கணவர் மற்றும் குழந்தைகள் கண் முன்பு சுஜிஜா பள்ளத்திற்குள் விழுந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    இதற்கிடையில் அந்த பகுதியில் நின்றவர்கள் ஒன்று சேர்ந்து, சுஜிஜா உள்பட 3 பேரையும் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதித்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சுஜிஜா ஏற்க னவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மற்ற 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்ப வம் குறித்த தகவல் கிடைத்ததும் திருவட்டார் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேஷ் சம்பவ இடம் சென்று ஆய்வு செய்தார். அந்த பகுதியில் உள்ளவர்களிடம் அவர் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

    அப்போது இடிந்து விழுந்த பகுதியில் மண்டப த்தில் உள்ள கழிவு நீர் தேக்கி வைப்பதற்காக ஒரு கழிவு நீர் தொட்டி (செப்டிக் டேங்க்) அமைப்பக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அதன் மேல் நின்றுதான் அனைவரும் சாப்பிட்டு முடித்த பின்னர் கை கழுவ வேண்டும். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் பெய்த கன மழையால் செப்டிக் டேங்க் பகுதி மண் அரிக்க ப்பட்டு இருந்தது. இதனால் தான் அந்தப் பகுதி இடிந்து விழுந்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண விழாவுக்கு வந்த பெண் கட்டிடம் இடிந்து விழுந்து பலியான சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சுஜிஜாவின் உடல் பிரேத பரிசோதனை ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் இன்று நடைபெறுகிறது.

    ×